Sunday, 21 July 2024

அடுத்த தாம்பரமாக உருவெடுக்கும் சிங்கப்பெருமாள் கோயில்

சென்னையின் முக்கிய வளரும் பகுதியான சிங்கப்பெருமாள் கோயில்

சென்னையில், தாம்பரம் வரை உள்ள பகுதிகள்தான் வளர்ச்சி கண்டு இருக்கிறது என்ற பழைய கருத்து மாறி விட்டது. தற்போது, தாம்பரத்தை தாண்டிய பகுதிகளும், சென்னைக்கு நிகராக வளர்ச்சி கண்டு வருகின்றன. இதற்குக் கிடைக்கும் சிறந்த உதாரணமாக செங்கல்பட்டு மற்றும் மறைமலைநகர் இடையே அமைந்துள்ள சிங்கப்பெருமாள் கோயில் திகழ்கிறது.

சிங்கப்பெருமாள் கோயில்: குடியிருப்பு மையம்

ஐடி நிறுவனங்களை மையமாகக் கொண்ட ஓம்ஆர் மற்றும் ஈசிஆர் பகுதிகளைப் போல அல்லாமல், சிங்கப்பெருமாள் கோயில் பகுதி பல்வேறு குடியிருப்பு தலமாக உருவாகி வருகிறது. இங்கு சிக்கலற்ற போக்குவரத்து திட்டம், கச்சிதமான கட்டமைப்பு ஆகியவை உள்ளதால் குடியிருப்பாளர்களுக்கு மிகவும் வசதியாக உள்ளது. பல்வேறு தொழில் துறைகளின் மக்களும் இங்கு வசிக்கின்றனர். மேலும், மின்சார ரயில் சேவை, மெட்ரோ, மற்றும் விமான நிலைய இணைப்புகள் ஆகியவை இந்த பகுதியைச் சென்னையின் முக்கிய பகுதியாக மாற்றியுள்ளது.

முக்கிய முதலீட்டு வாய்ப்பு: சிங்கப்பெருமாள் கோயில்

ஜிஎஸ்டி சாலையில் சிங்கப்பெருமாள் கோயிலில் இடம் வாங்குவது மிகவும் சிறந்த முதலீடாக கருதப்படுகிறது. ரயில்வே ஓவர் பாஸ் உள்ளிட்ட மேம்பாலங்களின் கட்டமைப்பால், இந்த பகுதியின் இடது புறம் மட்டுமின்றி வலது புறத்திலும் வளர்ச்சி வேகம் அடைகிறது. 

சிங்கப்பெருமாள் கோயிலின் தனிச்சிறப்புகள்

சிங்கப்பெருமாள் கோயில் பகுதியின் முக்கிய அம்சங்களில் ஒன்றான ரயில்வே ஓவர் பாஸ் மட்டும் இல்லாமல், எண்ணூர் முதல் மகாபலிபுரம் வரை வர இருக்கும் சென்னை பெரிபெரல் ரிங் ரோடு இந்த பகுதியில் இணைகிறது. மேலும், தாம்பரம்-செங்கல்பட்டு உயர்நிலை சாலை வழித்தடம், ஜிஎஸ்டி சாலையை ஒரகடத்துடன் இணைக்கும் ஒரே பகுதி போன்றவையும் இங்குள்ளன. இதனால், சிங்கப்பெருமாள் கோயில் ரயில்வே ஓவர் பாஸ் அருகில் அமைந்துள்ள ஜிஸ்கொயர் பவிலியன்ல் வில்லா மனைகள் இரட்டிப்பு மதிப்பு பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜிஎஸ்டி சாலையின் முக்கிய இணைப்புகள்

* சென்னையில் ரயில், சாலை, மெட்ரோ மற்றும் விமான நிலைய இணைப்புகளை வழங்கும் ஒரே சாலை ஜிஎஸ்டி சாலையே.
* பெங்களூர் நெடுஞ்சாலையுடன் இணைக்கும் வெளிவட்ட சாலை.
* சென்னை பைபாஸ் மூலம் கொல்கத்தா நெடுஞ்சாலையை அடையலாம்.
* வண்டலூர்-கிளாம்பாக்கம் வழியாக ஓஎம்ஆர்-ஈசிஆர் பகுதிகளுக்கு எளிதில் செல்லலாம்.
* கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு செல்ல வசதியாக உள்ளது.
* எண்ணூர் முதல் மகாபலிபுரம் வரையிலான வர்த்தக பாதையை இணைக்கும் சென்னை பெரிபெரல் ரிங் ரோடு.

850க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள்

சிங்கப்பெருமாள் கோயிலில் மஹிந்திரா, ரெனால்ட்-நிசான், போர்டு மற்றும் BMW போன்ற முக்கிய ஆட்டோமொபைல் மற்றும் டயர் தொழிற்சாலைகள் உள்ளன. மஹிந்திரா வேர்ல்ட்சிட்டி, ZOHO, கேப் ஜெமினி, விப்ரோ மற்றும் இன்போசிஸ் போன்ற ஐடி நிறுவனங்களும் இங்கு உள்ளன. 

மருத்துவமனைகள், சுகாதார மையங்கள், பொழுதுபோக்கு அம்சங்களும் இங்கு காணப்படுகிறது. சிங்கப்பெருமாள் கோயிலில் உள்ள அனைத்து முக்கிய சாலைகளும், சுமார் 850 உற்பத்தித் தொழிற்சாலைகளும் இணைக்கப்பட்டுள்ளன.

சிங்கப்பெருமாள் கோயில் மேம்பாலம்

ஜிஎஸ்டி சாலையில் வலதுபுறம் ரயில்வே பாதை இருப்பதால், இடதுபுற பகுதி வளர்ச்சி கண்டு வந்தது. மேம்பாலங்கள் கட்டப்பட்டதால் ஊரப்பாக்கம், வண்டலூர், கிளாம்பாக்கம், கூடுவாஞ்சேரி, காட்டாங்குளத்தூர் போன்ற பகுதிகளும் வளர்ச்சி அடைய ஆரம்பித்தன. 

சிங்கப்பெருமாள் கோயில் மேம்பாலம், ஜிஎஸ்டி சாலையின் இரு புறத்திலும் இணைப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் அப்பகுதி மேலும் வளர்ச்சி அடையும் சூழல் உருவாகியுள்ளது.

சென்னையின் வளர்ச்சிக்கு சிங்கப்பெருமாள் கோயில் முக்கிய பங்காற்றுகிறது. ஜிஎஸ்டி சாலையுடன் உள்ள இணைப்புகள், பல்வேறு கட்டமைப்புகளையும் வாய்ப்புகளையும் ஏற்படுத்தியுள்ளது. 

இந்த மாபெரும் வளர்ச்சியால் பல்வேறு வசதிகள் ஒரே இடத்தில் கிடைக்கின்றன. இதனால் சிங்கப்பெருமாள் கோயில், மக்கள் வாழ்வதற்கும், புதிய தொழில்கள் அமைக்க ஏற்ற இடமாகவும் மாறியுள்ளது.

Thursday, 18 July 2024

தாம்பரம் பணிமனையில் பொறியியல் பணிகளால் 55 மின்சார ரயில்களின் சேவை ரத்து: ஜூலை 23 முதல் ஆக.14 வரை இயக்கப்படாது

சென்னை: சென்னை ரயில்வே கோட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை கடற்கரை - செங்கல்பட்டுக்கு ஜூலை 23-ம் தேதி முதல் ஆக.14-ம் தேதி வரை காலை 9.30, 9.56,10.56, முற்பகல் 11.40, நண்பகல் 12.20, 12.40, இரவு 10.40 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட உள்ளன.
சென்னை கடற்கரை - தாம்பரத்துக்கு ஜூலை 23 முதல் ஆக.14-ம் தேதி வரைகாலை 9.40, 9.48, 10.04, 10.12, 10.24,10.30, 10.36, 10.46, 11.06, 11.14,11.22,11.30, 11.50, நண்பகல் 12.00, 12.10, 12.30,12.50, இரவு 11.05, 11.30, 11.59 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட உள்ளன.

சென்னை கடற்கரை - கூடுவாஞ்சேரிக்கு ஜூலை 23-ம் தேதி முதல் ஆக.14-ம் தேதி வரை இரவு 7.19, 8.15, 8.45, 8.55, 9.40 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்பட உள்ளன.


தாம்பரம் - சென்னை கடற்கரைக்கு ஜூலை 23 முதல் ஆக.14-ம் தேதி காலை10.30, 10.40, 11.00, 11.10, 11.40, நண்பகல்12.05, 12.35, மதியம் 1.00, 1.30 இரவு 11.40ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்ரயில்கள் ரத்து செய்யப்பட உள்ளன.

செங்கல்பட்டு - கும்மிடிப்பூண்டிக்கு ஜூலை 23-ம் தேதி முதல் ஆக.14-ம் தேதிவரை இயக்கப்படும் மின்சார ரயில், இதுபோல, காஞ்சிபுரம் - சென்னை கடற்கரைக்கு காலை 9.30 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் ஆகிய ரயில்கள் ரத்து செய்யப்பட உள்ளன.


செங்கல்பட்டு - சென்னை கடற்கரைக்கு ஜூலை 23-ம் தேதி முதல் ஆக.14-ம் தேதி வரை காலை 11.00, 11.30, நண்பகல் 12.00, இரவு 11.00 ஆகியநேரங்களில் இயக்கப்படும் ரயில்கள் ரத்து செய்யப்பட உள்ளது. இதுதவிர,கூடுவாஞ்சேரி - சென்னை கடற்கரைக்குஅதே நாட்களில் இரவு 8.55, 9.45, 10.10, 10.25, 11.20 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட உள்ளன.

சிறப்பு ரயில்கள்: இந்த ரயில்களுக்கு மாற்றாக, சென்னை கடற்கரை - பல்லாவரத்துக்கு அதேநாட்களில் இரவு 10.40, 11.05, 11.30 ஆகிய நேரங்களிலும், பல்லாவரம் - சென்னை கடற்கரைக்கு காலை 10.20, 11.00, 11.20, 11.40, நண்பகல் 12.00, 12.40, மதியம் 1.00, 1.20, 1.40, ஆகிய நேரங்களில் சிறப்பு பாசஞ்சர் ரயில்கள் இயக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது

Wednesday, 17 July 2024

ரூ.1000 மகளிர் உரிமை தொகை ஓவர்.. இனி கூடுதலாக ரூ.2000 வருது! மிஸ் பண்ணாதீங்க.. தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: தமிழ்நாடு அரசு சொன்னபடியே மகளிர் உரிமை தொகை திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டுவிட்டது. இதனோடு இன்னும் இரண்டு புதிய திட்டங்கள் தமிழ்நாடு அரசால் தொடங்கப்பட உள்ளன. இதன் மூலம் மக்களின் வங்கி கணக்குகளில் ரூ.2000 வரப்போகிறது. அந்த திட்டங்கள் என்னென்ன என்பதை இங்கே பார்க்கலாம்.

நேற்று கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் மேல்முறையீடு செய்த 1,48,000 பயனாளிகளின் வங்கி கணக்கில் ரூ.1000 செலுத்தப்பட்டது. இந்த திட்டம் மேலும் விரிவாக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பாக அரசு அதிகாரிகள் சில முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளனர்.

கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் விரிவாக்கப்பட்டுள்ளது. நேற்று புதிதாக இணைக்கப்பட்ட பயனாளிகளுக்கு பணம் வழங்கப்பட்டது. கடந்த மாதம் வரை 1.15 கோடி பேர் இந்த தொகையை பெற்றுள்ளனர்; தற்போதும் மேலும் 1,48,000 பேருக்கு இந்த உரிமை தொகை வழங்கப்பட்டுள்ளது.

மேலும் இரண்டு திட்டங்கள்: அரசு பள்ளிக்கு செல்லும் பெண் மற்றும் ஆண் குழந்தைகள் இருந்தால், வீடு தேடி இந்த தொகை ரூ.2000 அளிக்கப்படும். புதுமை பெண் திட்டம் விரிவாக்கம் மற்றும் தமிழ் புதல்வன் திட்டம் ஆகியவை தொடங்கப்பட உள்ளன.

தமிழ் புதல்வன் திட்டம்: புதுமை பெண் திட்டம் போல, மாணவர்களுக்கு ரூ.1000 வழங்கும் தமிழ் புதல்வன் திட்டம் விரைவில் தொடங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

கடந்த வருடம் தமிழ்நாடு பட்ஜெட்டில் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவித் திட்டம் மாற்றப்பட்டு, உயர்கல்வி உறுதித் திட்டமாக அறிவிக்கப்பட்டது. இதன் கீழ் பெண்களுக்கு திருமண உதவித்தொகையும் தாலிக்கு தங்கமும் வழங்கப்பட்டு வந்தது. தற்போது அரசு பள்ளிகளில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படுகிறது.

யாருக்கு வழங்கப்படுகிறது?: மாணவிகள் இளங்கலை படிப்பு முடிக்கும் வரை இந்த தொகை வழங்கப்படும். மாணவிகள் எங்கும் செல்லாமல், நேரடியாக அவர்களின் வங்கி கணக்கில் இந்த தொகை செலுத்தப்படும். இந்த திட்டத்திற்கு 'புதுமைப்பெண் திட்டம்' என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் கடந்த வருடம் தொடங்கப்பட்டு, ஒரு வருடமாக பணம் வழங்கப்பட்டு வருகிறது. இன்னும் 3 வாரங்களில் தமிழ் புதல்வன் திட்டமும் தொடங்கப்படும்.

மாணவர்களுக்கு பணம்: புதிய மாணவிகள் அடுத்த மாதம் சேர்க்கப்பட உள்ளனர். புதுமைப்பெண் திட்டம் போல, மாணவர்களுக்கு ரூ.1000 வழங்கும் தமிழ் புதல்வன் திட்டம் விரைவில் தொடங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், புதுமைப்பெண் திட்டம் போல, மாணவர்களுக்கு ரூ.1000 வழங்கும் தமிழ் புதல்வன் திட்டம் விரைவில் தொடங்கப்படும். தமிழ்நாட்டில் போதைப் பொருள் நடமாட்டத்தை பெருமளவில் கட்டுப்படுத்தி உள்ளதாக கூறியுள்ளார்.

போதைப் பொருள் நடமாட்டம் என்பது சட்டம் - ஒழுங்குப் பிரச்சினை மட்டுமல்ல, சமூக ஒழுங்குப் பிரச்சினை என்றும் முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். 

கலைஞர் கனவு இல்லம் திட்டம் மற்றும் இரண்டரை லட்சம் தொகுப்பு வீடுகளைப் புனரமைக்கும் திட்டத்திற்கும் தனி கவனம் செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.

பட்ஜெட்: அரசு பள்ளியில் படித்து கல்லூரி சேரும் மாணவர்களுக்கு இந்த நிதி வழங்கப்படும். இளங்கலை படிப்பு முடிக்கும் வரை மாணவர்களுக்கு இந்த தொகை வழங்கப்படும். மாணவர்கள் எங்கும் செல்லாமல், நேரடியாக அவர்களின் வங்கி கணக்கில் இதற்கான தொகை செலுத்தப்படும். 'தமிழ் புதல்வன் திட்டம்' என்று இந்த திட்டத்திற்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் தொடக்க விழா விரைவில் நடைபெறும்.

அடுத்த தாம்பரமாக உருவெடுக்கும் சிங்கப்பெருமாள் கோயில்

சென்னையின் முக்கிய வளரும் பகுதியான சிங்கப்பெருமாள் கோயில் சென்னையில், தாம்பரம் வரை உள்ள பகுதிகள்தான் வளர்ச்சி கண்டு இருக்கிறது எ...