Wednesday, 17 July 2024

1000 கோடியில் அடையாளமே மாறப்போகும் தாம்பரம் ரயில் நிலையம்.. அசர வைக்கும் புதிய படங்களை பாருங்க

சென்னை: சென்னையில் எழும்பூர், சென்ட்ரல், தாம்பரம் ஆகிய ரயில் நிலையங்கள் தற்போது ரயில்கள் வந்து செல்லும் முனையங்களாக உள்ளன. இதில் தாம்பரம் ரயில் நிலையம் 1000 கோடியில் மேம்படுத்தப்பட உள்ளது. பணிகளுக்குப் பிறகு தாம்பரம் ரயில் நிலையம் எப்படி இருக்கும் என்பது குறித்து புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.

ஒரு காலத்தில் சென்னையின் புறநகர் பகுதியாக இருந்த தாம்பரம், கடந்த 20 ஆண்டுகளில் சென்னையின் மையப்பகுதி என்று சொல்லும் அளவிற்கு வளர்ந்துள்ளது. சென்னை தற்போது தெற்கே செங்கல்பட்டு வரையிலும், மேற்கே ஸ்ரீபெரும்புதூர் வரையிலும், வடக்கே பொன்னேரி வரையிலும், கிழக்கில் மகாபலிபுரம் வரையிலும் வளர்ந்துள்ளது. சுமார் 60 கிலோமீட்டர் சுற்றளவுக்கு வளர்ந்துள்ள சென்னையின் மையப்பகுதி என்று சொல்லும் அளவிற்கு தாம்பரம் உருவெடுத்துள்ளது.
தாம்பரம் ரயில் நிலையத்திலிருந்து வெறும் 6 கிமீ தூரத்தில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தாம்பரம் முதல் செங்கல்பட்டு இடையேயான வளர்ச்சி அசுரவேகத்தில் இருக்கிறது. இந்த சூழலில் எழும்பூர் மற்றும் சென்ட்ரலுக்கு பதிலாக தாம்பரம் ரயில் நிலையத்திலிருந்து புதிய ரயில்கள் புறப்பட்டு செல்கின்றன. திருநெல்வேலி, கோவை, நாகர்கோவில் உள்பட தமிழகத்திற்கு அறிவிக்கப்பட்ட புதிய ரயில்கள் தற்போது தாம்பரத்தில் இருந்துதான் புறப்படுகின்றன.

இது தவிர ஆந்திரா வழியாக வடமாநிலம் செல்லும் ரயில்கள் சென்ட்ரலுக்கு பதிலாக தாம்பரத்தில் இருந்து புறப்பட தொடங்கி உள்ளன. இனி சென்னைக்கு புதிதாக அறிவிக்கப்படும் எந்த ரயிலாக இருந்தாலும் தாம்பரத்தில் இருந்தே புறப்படும் என்று தெரிகிறது. அந்த அளவிற்கு தாம்பரம் ரயில் நிலையம் முக்கியத்துவம் வாய்ந்ததாக உருவெடுத்துள்ளது. ஆனால் தாம்பரம் ரயில் நிலையம், சென்ட்ரல், எழும்பூர் போல் மிகப்பெரிய அளவில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் உள்ள ரயில் நிலையமாக இல்லை.
எனவே தான் மத்திய அரசு 1000 கோடி செலவில் தாம்பரம் ரயில் நிலையத்தை வேறலெவலில் மாற்ற முடிவு செய்துள்ளது. ரயில் நிலையத்தின் கழிவறைகள், டிஜிட்டல் பலகைகள், எஸ்கலேட்டர்கள், புதுப்பிக்கப்பட்ட சேர்கள், வேளச்சேரி சாலை, ஜிஎஸ்டி சாலை என இருப்பக்கமும் உள்ள முகப்புகள், வாகனங்கள் வந்து செல்லும் வழி, நடை மேம்பாலங்கள், பார்க்கிங் வசதி, குடிநீர் வசதிகள், விளக்குகள், பிளாட்பார்ம்கள் என எல்லாமே வேறவெலலில் மாறப்போகின்றன.

தாம்பரம் ரயில் நிலையத்தின் உள்நுழைவு, வெளியேறும் பகுதி, ஜிஎஸ்டி சாலையில் வாகனங்கள் செல்லும் பகுதி, வேளச்சேரி சாலையில் ரயில் நிலையத்தின் வெளியேறும் பகுதி, உள்ளே வரும் பகுதி என எல்லாமே மிக அகலமாக மாறுகிறது. பசுமை பூங்காக்கள் அமைக்கப்பட உள்ளன. ரயில் நிலைய கட்டிடங்கள் முழுமையாக ஐடி நிறுவனங்களை போல் பார்க்க மிக அழகாக மாற்றப்பட உள்ளது.
தாம்பரம் ரயில் நிலையமா இது என்று கேட்கும் அளவிற்கு மாறும் என்று தெரிகிறது. இது தொடர்பான புதிய புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. கிரியேட்டிவ் குரூப் சார்பாக வெளியிடப்பட்ட இந்த புகைப்படத்தை சென்னை அப்டேட்ஸ் என்ற பக்கத்தில் நெட்டிசன் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் காண்போரை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளன.

Tuesday, 16 July 2024

சென்னை | ஒரே டிக்கெட்.. ஆனா மூன்று வகை போக்குவரத்து பயணம்... வரப்போக்கும் சூப்பர் திட்டம்!


சென்னையில் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குப் பேருந்து, மெட்ரோ, மின்சார ரயில் ஆகிய மூன்று போக்குவரத்து வசதிகள் உள்ளன. இந்த மூன்று போக்குவரத்துகளுக்கும் மக்கள் தனித் தனியாக டிக்கெட் எடுத்து பயணித்து வருகின்றனர்.

இப்போது, இவை அனைத்திற்கும் ஒரே பயணச்சீட்டை பயன்படுத்தும் புதிய நடைமுறை கொண்டு வரப்பட உள்ளது. இதற்கான செயலியை உருவாக்கும் பணி Moving Tech Innovations Private Limited என்ற நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

ஒரே டிக்கெட்டைப் பயன்படுத்தி மூன்றிலும் பயணிக்க வசதியாக கார்டு போன்ற பாஸ் அறிமுகப்படுத்தப்படுகிறது. பொதுமக்கள் இந்த கார்டை ரீசார்ஜ் செய்து பயன்படுத்தலாம். கியூ ஆர் கோடை பயன்படுத்தி அனைத்துப் பொதுப் போக்குவரத்திலும் ஒரே டிக்கெட்டுடன் பயணிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

முதற்கட்டமாக, இந்தாண்டு டிசம்பர் மாதத்தில் சென்னை மாநகர பேருந்துகள் மற்றும் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்யும் வகையில் நடைமுறைப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் புறநகர் ரயில்களில் பயணம் செய்யும் வகையில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும்.

சென்னையில் மீண்டும் வருது டபுள் டக்கர் பேருந்துகள்! பயணிகளுக்கு இன்ப அதிர்ச்சி! எந்த ரூட்டில் ஓடும்?

சென்னை: மீண்டும் இரட்டை அடுக்கு பேருந்துகள்

சென்னை சாலைகளில் மீண்டும் இரட்டை அடுக்கு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. 2008ஆம் ஆண்டிற்குப் பிறகு முழுமையாக நிறுத்தப்பட்டிருந்த டபுள் டக்கர் பஸ்களை மீண்டும் கொண்டுவர சென்னை மாநகர போக்குவரத்து கழகம் 500 பேருந்துகளை வாங்க முடிவு செய்துள்ளது. இதன் விவரங்களை விரிவாகப் பார்க்கலாம்.

நகரின் போக்குவரத்து சேவைகள்

சென்னையில் மாநகர போக்குவரத்து கழகத்தின் சார்பில் ஏராளமான பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. சென்னையில் ரயில், மெட்ரோ போன்றவை இருந்தாலும், பஸ்களே அனைத்து இடங்களுக்கும் செல்வதால் அவற்றில் கூட்டம் எப்போதும் நிறைந்தே இருக்கும்.

தாழ்தள பேருந்துகள்

சென்னை எம்டிசி, ஆயிரக்கணக்கான பேருந்துகளை சென்னை மாநகர மற்றும் புறநகர் பகுதிகளுக்கு இயக்கி வருகிறது. பயணிகளின் வசதிகளை கருத்தில் கொண்டு ஏசி பஸ், டீலக்ஸ் போன்ற சேவைகளையும் வழங்கி வருகிறது. விரைவில் தாழ்தள பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன, இவை டெப்போக்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

18 ஏ வழித்தடத்தில் டபுள் டக்கர்

சென்னையில் மீண்டும் டபுள் டக்கர் பேருந்துகளை இயக்க மாநகர போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது. 1970களில் முதன் முறையாக சென்னையில் இவை அறிமுகமாகின. 1980களில் போதிய வரவேற்பு இல்லாததால் நிறுத்தப்பட்டது. 1997ஆம் ஆண்டில் மீண்டும் இயக்கப்பட்ட இவை, 2008ஆம் ஆண்டு வரை 18 ஏ வழித்தடத்தில் சேவையளித்தன. பின்னர் பல்வேறு கட்டுமானப் பணிகள் காரணமாக நிறுத்தப்பட்டன.

மீண்டும் இரட்டை அடுக்கு பேருந்து சேவை

மீண்டும் சென்னையில் இரட்டை அடுக்கு பேருந்துகளை இயக்க மாநகர போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது. அடுத்த ஆண்டு முதல் இவை மின்சாரத்தில் இயங்கும் வகையில் இயக்கப்பட உள்ளன. உலக வங்கியின் நிதியுதவியுடன் இந்த எலக்ட்ரிக் டபுள் டக்கர் பஸ்கள் வாங்கப்பட உள்ளது.

தனியாரிடம் ஒப்படைப்பு

இந்த பேருந்துகளை இயக்கவும் பராமரிப்புப் பணிகளை தனியாரிடம் ஒப்படைக்கப்படும். எம்டிசி, வழித்தடம், கட்டணம் போன்றவற்றை நிர்ணயிக்கும். டிக்கெட் வசூலையும் எம்டிசியே நிர்வகிக்கும்.

960 கோடி ரூபாய் ஒப்பந்தம்

டபுள் டக்கர் பேருந்துகளை இயக்கி சோதனை ஓட்டத்தையும் அசோக் லைலாண்ட் நிறுவனம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முடித்துள்ளது. 500 டபுள் டக்கர் பேருந்துகளை வாங்க 960 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒப்பந்தம் வெளியிடப்பட உள்ளது.

பயணிகளின் மகிழ்ச்சி

மும்பையில் கடந்த ஜனவரியில் நாட்டின் முதல் ஏசி இரட்டை அடுக்கு பேருந்துகள் அறிமுகம் செய்யப்பட்டது. பெங்களூரிலும் விரைவில் அறிமுகமாக உள்ளன. சென்னையிலும் இந்த பேருந்துகள் இயக்கப்படும் தகவல் பயணிகளை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

அடுத்த தாம்பரமாக உருவெடுக்கும் சிங்கப்பெருமாள் கோயில்

சென்னையின் முக்கிய வளரும் பகுதியான சிங்கப்பெருமாள் கோயில் சென்னையில், தாம்பரம் வரை உள்ள பகுதிகள்தான் வளர்ச்சி கண்டு இருக்கிறது எ...